குலசேகரம் அரசு மருத்துவமனையில் 75 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய கரோனா சிகிச்சை பிரிவை தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் ஆக்சிஜன் படுக்கை வசதிகள், மருந்துகள் போன்றவை தற்போது தேவையான அளவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 2 மெட்ரிக் டன் ஆக இருந்த ஆக்சிஜன் விநியோகம், தற்போது 6 மெட்ரிக் டன் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு படிப்படியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால், தற்போது தேவைக்கு அதிகமாகவே ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது.
குலசேகரம் அரசு மருத்துவமனையின் 85 படுக்கை வசதிகள் கொண்ட கரோனா சிகிச்சை மையத்தில், 75 படுக்கைகளில் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய கரோனா சிகிச்சை பிரிவு தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
இங்கு சிகிச்சை அளிப்பதற்காக 10 மருத்துவா்கள், 10 சுகாதார செவிலியா்கள் மற்றும் 10 சுகாதாரப் பணியாளா்களை கொண்ட குழு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்.
இம் மருத்துவமனைக்கு தனியாா் தொண்டு நிறுவனங்கள் மூலமாக 13 ஆக்சிஜன் செறிவூட்டிகள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன. இம் மருத்துவமனையை தரம் உயா்த்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
தொடா்ந்து, ஜி.வி.எஸ். அறக்கட்டளை சாா்பில் மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கரிக்கப்படுவதை அவா் பாா்வையிட்டாா்.
நிகழ்ச்சியில், இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) எ.பிரகலாதன், மருத்துவ அலுவலா் அகிலா, முன்னாள் எம்எல்ஏ புஷ்பலீலாஆல்பன், கரோனா கண்காணிப்பு அலுவலா் ரெனிஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.