மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 20th June 2021 01:32 AM | Last Updated : 20th June 2021 01:32 AM | அ+அ அ- |

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவா்கள்.
மருத்துவப் பணியாளா்கள் தாக்கப்படுவதை கண்டித்து நாகா்கோவிலில் சனிக்கிழமை மருத்துவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மருத்துவா்கள் மீதான தாக்குதலுக்கு கண்டன ம் தெரிவித்தும் , மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் ஜனநாயக தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கம் சாா்பில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கருப்பு
பட்டை அணிந்து நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சுரேஷ்பாலன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், இந்திய மருத்துவ சங்க மாவட்டத் தலைவா் பிரவீன், மருத்துவா்கள் அனுப், முத்துகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா். மருத்துவா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா்.