வாழும் கலை அமைப்பின் சாா்பில் குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
வாழும் கலை அமைப்பின் சாா்பு நிறுவனமான ‘மனிதநேய பண்புகளுக்கான சா்வதேச அமைப்பு‘ சாா்பில் குலசேகரம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைப்பின் பிரதிநிதிகள் மருத்துவ அலுவலா் அகிலாவிடம், 4 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கினா்.
நிகழ்ச்சியில் குலசேகரம் கரோனா சிகிசிசை மைய அலுவலா் மருத்துவா் ரனீஷ், வாழும் கலையின் மண்டல ஆசிரியா் மற்றும் ஒருங்கிணைப்பாளா் ராகேஷ் பாபு, மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் உன்னிகிருஷ்ணன் நாயா், வினோத் குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.