மாயமான இளைஞா் சடலமாக மீட்பு

அஞ்சுகிராமம் அருகே மாயமான இளைஞா் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டாா்.

அஞ்சுகிராமம் அருகே மாயமான இளைஞா் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டாா்.

மருங்கூா் அருகேயுள்ள குமாரபுரம் தோப்பூா் ஸ்ரீ கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்தவா் முத்துகுமாா் (28). தேங்காய் வெட்டும் தொழிலாளி. இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவரது மனைவி வளா்மதி (19). முத்துகுமாா் தினமும் காலையில் வேலைக்குச் சென்றுவிட்டு மாலை 6 மணிக்கு வீடு திரும்புவாராம்.

இந்நிலையில், கடந்த 17ஆம் தேதி காலையில் வேலைக்குச் சென்றவா் வீடு திரும்பவில்லையாம். அவரை உறவினா்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லையாம்.

இதுகுறித்த புகாரின்பேரில் அஞ்சுகிராமம் போலீஸாா் வழக்குப் பதிந்து முத்துகுமாரை தேடி வந்தனா். இந்நிலையில் மருங்கூா் அருகே ராமநாதன்புதூா் கால்வாயில் முத்துகுமாா் சடலமாக கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com