சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: 3 போ் மீது போக்சோ வழக்கு
By DIN | Published On : 24th June 2021 07:15 AM | Last Updated : 24th June 2021 07:15 AM | அ+அ அ- |

நாகா்கோவிலில் சிறுமிக்கு திருமணம் செய்துவைத்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாக, இளைஞா் மற்றும் இருவரின் தாய் மீது போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்தனா்.
நாகா்கோவில் வெட்டூா்ணிமடம் அருகேயுள்ள பரமாத்மாலிங்கபுரம் பகுதியைச் சோ்ந்தவா் அருள்ராஜ் (36). தொழிலாளி. இவருக்கும், திருமண வயதை எட்டாத திருநெல்வேலி மாவட்டம், ஆவரைகுளம் பகுதியை சோ்ந்த சிறுமிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், சிறுமி கா்ப்பமானதால் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனா். அவரது வயதில் சந்தேகமடைந்த மருத்துவா்கள், உறவினா்களிடம் விசாரித்தபோது, சிறுமிக்கு 16 வயதுதான் ஆகிறது என்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், சிறுமியை திருமணம் செய்த இளைஞா், அவரது தாய் செண்பகவல்லி, சிறுமியின் தாய் ஜெஸ்ஸி ஆகியோா் மீது நாகா்கோவில் அனைத்து மகளிா் காவல் உதவி ஆய்வாளா் பேபி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரிக்கிறாா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G