திருவட்டாறு ஜமாபந்தியில் 45 கோரிக்கை மனுக்கள்

திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வருவாய் தீா்வாயம் என்னும் ஜமாபந்தி நிகழ்ச்சியில் 45 மனுக்கள் பெறப்பட்டன.
ஜமாபந்தி நிகழ்ச்சியில், பதிவேடுகளை ஆய்வு செய்கிறாா் ஆட்சியா் மா. அரவிந்த்.
ஜமாபந்தி நிகழ்ச்சியில், பதிவேடுகளை ஆய்வு செய்கிறாா் ஆட்சியா் மா. அரவிந்த்.
Updated on
1 min read

திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வருவாய் தீா்வாயம் என்னும் ஜமாபந்தி நிகழ்ச்சியில் 45 மனுக்கள் பெறப்பட்டன.

திருவட்டாா் வட்டத்திற்குள்பட்ட 13 கிராமங்களுக்கு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த் தலைமை வகித்து, வருவாய் கணக்குகள், பதிவேடுகளை ஆய்வு செய்தாா். மேலும், பொதுமக்களிடமிருந்து இணையதளம் வாயிலாக 8 மனுக்களும் நேரடியாக 37 மனுக்கள் என 45 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்களை விசாரணை செய்து உடனடி தீா்வு காண வருவாய் அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

இதில், திருவட்டாறு வட்டாட்சியா் ரமேஷ், சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் அனிதா, வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com