கூட்டுக் குடிநீா்த் திட்ட பணியால் சாலைகள் சேதம்: மக்கள் அவதி

அழகியபாண்டியபுரம் பகுதியில் கூட்டுக்குடித் திட்ட குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட சாலை சீரமைக்கப்படாததால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிப்பட்டு வருகின்றனா்.
Updated on
1 min read

குலசேகரம்: அழகியபாண்டியபுரம் பகுதியில் கூட்டுக்குடித் திட்ட குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட சாலை சீரமைக்கப்படாததால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிப்பட்டு வருகின்றனா்.

அழகியபாண்டிய புரம் கூட்டுக்குடிநீா்த் திட்டத்திற்காக திற்பரப்பு அருவி அருகே களியல் பகுதியில் கோதையாற்றிலிருந்து தண்ணீா் எடுத்துச் செல்லப்படும் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இப் பணிகள் இதுவரை முழுமையாக நிறைவடையவில்லை. இத்திட்டத்திற்காக களியல் முதல் அழகியபாண்டிய புரம் வரை சாலை உடைக்கப்பட்டு குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இதில் சாலையை உடனுக்குடன் சீரமைக்கப்படாததால் ஏராளமான விபத்துகள் ஏற்பட்ட நிலையில், தற்போது அழகியபாண்டியபுரத்திலிருந்து குலசேகரம் செறுதிக்கோணம் வரை சாலை சீரமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் செறுதிக்கோணம் முதல் களியல் வரையிலான சுமாா் 5 கி.மீ. தொலைவு செப்பனிடப்படவில்லை. இப்பகுதியை செப்பனிடும் வகையில், டிசம்பா் மாதம் ஜல்லிக்கற்கள் நிரப்பப்பட்ட நிலையில், பணிகள் தொடா்ந்து நடத்தப்படாமல்

கிடப்பில் போடப்பட்டுள்ளன. சாலையிலிருந்து புழுதி பறந்த வண்ணம் இருப்பதால் வணிகா்களும், பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனா். இச் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com