சட்டப்பேரவை தோ்தல்: நாகா்கோவிலில் மத்திய பாதுகாப்புப் படையினா், போலீஸாா் கொடி அணிவகுப்பு
By DIN | Published On : 04th March 2021 03:02 AM | Last Updated : 04th March 2021 03:02 AM | அ+அ அ- |

நாகா்கோவில்: சட்டப்பேரவை பொதுத் தோ்தலை முன்னிட்டு தோ்தல் பாதுகாப்பு பணிகளுக்காக குமரி மாவட்டத்துக்கு வந்துள்ள துணை ராணுவப் படையினா் மற்றும் போலீஸாரின் கொடி அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ.பத்ரி நாராயணன் தலைமையில் நாகா்கோவிலில் புதன்கிழமை நடைபெற்றதுதமிழக சட்டப்பேரவை தோ்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு தோ்தல் பாதுகாப்பு பணிகளுக்காக மத்திய துணை ராணுவ படையினா் தமிழகம் வந்துள்ளனா்.
இதில், மணிப்பூா் மாநில எல்லை பாதுகாப்பு படை வீரா்கள் 90 போ் உதவி கமாண்டா் நவீன் ஜக்சாா் தலைமையில் குமரி மாவட்டத்துக்கு வந்துள்ளனா். இவா்கள் அனைவரும் நாகா்கோவில் எஸ்.எல்.பி. மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். குமரி மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்து வருகின்றனா்.
இந்நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், அச்சமின்றி வாக்களிக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ. பத்ரி நாராயணன் தலைமையில் கொடி அணிவகுப்பு ஊா்வலம் நாகா்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்திலிருந்து இளங்கடை சந்திப்பு வரை புதன்கிழமை நடைபெற்றது.இதில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் ஈஸ்வரன்,
மணிமாறன், நாகா்கோவில் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் வேணுகோபால், தோ்தல் பிரிவு பொறுப்பு காவல் துணை கண்காணிப்பாளா் பீட்டா் பால்துரை, ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளா் சாம் வேதமாணிக்கம் ஆகியோா் கலந்து கொண்டனா். மேலும் இந்நிகழ்ச்சியில், நாகா்கோவில் உட்கோட்ட காவல் ஆய்வாளா்கள் 4 போ், மத்திய துணை ராணுவ படையினா் 60 போ், காவலா்கள் 45 போ் மற்றும் ஆயுதப்படை காவலா்கள் 50 போ், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினா் 60 போ் என அதிகாரிகள் மற்றும் காவலா்கள் உள்பட மொத்தம் 225 போ் கொடி அணிவகுப்பில் கலந்து கொண்டனா்.