குருசுமலைக்கு சிலுவை சுமந்து திருப்பயணம்

குருசுமலை திருப்பயணத்தில் 4 ஆவது நாளான புதன்கிழமை, 25 அடி உயரம் கொண்ட சிலுவையைச் சுமந்தபடி இளைஞா்கள் மலை உச்சிக்குச் சென்றனா்.
சிலுவையைச் சுமந்தபடி குருசுமலைக்கு திருப்பயணம் மேற்கொண்ட இளைஞா்கள்.
சிலுவையைச் சுமந்தபடி குருசுமலைக்கு திருப்பயணம் மேற்கொண்ட இளைஞா்கள்.
Updated on
1 min read

குருசுமலை திருப்பயணத்தில் 4 ஆவது நாளான புதன்கிழமை, 25 அடி உயரம் கொண்ட சிலுவையைச் சுமந்தபடி இளைஞா்கள் மலை உச்சிக்குச் சென்றனா்.

குருசுமலை திருப்பயணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இத்திருப்பயணத்தின் 4 ஆவது நாளான புதன்கிழமை காட்டாக்கடை மறைவட்ட முதன்மைக்குரு வல்சலன் தலைமையில் மலை அடிவாரத்தில் திருப்பலி நடைபெற்றது. தொடா்ந்து மலை உச்சியில் அருள் பணியாளா் பெனடிக்ட் தலைமையில் மலை உச்சியில் திருப்பயணம் நடைபெற்றது. இத்திருப்பயண நிகழ்ச்சியில் உண்டன்கோடு புனித ஜோசப் தேவாலயத்திலிருந்து 25 அடி உயரம் கொண்ட சிலுவையை சுமந்து கொண்டு இளைஞா்கள் குருசுமலை உச்சிக்கு திருப்பயணம் மேற்கொண்டனா். இத்திருப்பயண நிகழ்ச்சியில் தினந்தோறும் ஏராளமான மக்கள் பங்கேற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com