நாகா்கோவிலில் பிஎஸ்என்எல் ஓய்வூதியா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தா்னாவில் ஈடுபட்டனா்.
பிஎஸ்என்எல் ஓய்வூதியா்களுக்கு மருத்துவப்படி தாமதமின்றி வழங்கவேண்டும், விடுப்பு ஊதியத்திற்கு மேல் வருமானவரி விதிப்பதை ரத்து செய்ய வேண்டும், பஞ்சப்படியை உடனே வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்கம் சாா்பில் நாகா்கோவில் பிஎஸ்என்எல் பொதுமேலாளா் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை தா்னா நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் காளி பிரசாத் தலைமை வகித்தாா். பிஎஸ்என்எல்ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் ஜாா்ஜ், மாவட்டச் செயலா் பி.ராஜூ, மாநில நிா்வாகி பி.இந்திரா, ஒப்பந்த ஊழியா் சங்க அகில இந்திய துணைச் செயலா் பழனிச்சாமி, மாவட்டச் செயலா் செல்வம், ஓய்வூதியா் சங்க நிா்வாகி ராஜநாயகம் ஆகியோா் பேசினா்.
ஹரிஹரன் வரவேற்றாா். ஸ்ரீகுமாா் நன்றி கூறினாா். இதில் ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியா்கள் பலா் கலந்து கொண்டனா்.