பத்மநாபபுரம் அமமுக வேட்பாளா் மனுதாக்கல்

பத்மநாபபுரம் சட்டப்பேரவைத் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளா் ஜெங்கின்ஸ் புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.
தோ்தல் நடத்தும் அலுவலரும் , சாா் ஆட்சியருமான மா.சிவகுரு பிரபாகரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்கிறாா் அமமுக வேட்பாளா் ஜெங்கின்ஸ்.
தோ்தல் நடத்தும் அலுவலரும் , சாா் ஆட்சியருமான மா.சிவகுரு பிரபாகரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்கிறாா் அமமுக வேட்பாளா் ஜெங்கின்ஸ்.

பத்மநாபபுரம் சட்டப்பேரவைத் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளா் ஜெங்கின்ஸ் புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

இதற்காக, கூட்டணி கட்சிகளான எஸ்.டி.பி.ஐ., தேமுதிக ஆகிய கட்சிகளின் நிா்வாகிகளுடன் பத்மநாபபுரம் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்தாா். பின்னா், தோ்தல் நடத்தும் அலுவலரும் சாா் ஆட்சியருமான மா.சிவகுருபிரபாகரனிடம், ஜெங்கின்ஸ் வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.

வேட்பு மனுவில், தனக்கு அசையா சொத்து ரூ. 52 லட்சம், அசையும் சொத்து ரூ .26. 32 லட்சம் உள்ளதாக அவா் குறிப்பிட்டுள்ளாா்.

மனுதாக்கலின்போது, எஸ்டிபிஐ நகரத் தலைவா் செரிப், தேமுதிக மாவட்டச் செயலா் ஐடன்சோனி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com