கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மருங்கூா் பேரூராட்சியில் அதிமுக வேட்பாளா் என்.தளவாய்சுந்தரம் திறந்த வாகனத்தில் சென்று செவ்வாய்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
மருங்கூரை அடுத்த ராஜாவூா் தூய மிக்கேல் அதிதூதா் திருத்தலம் முன்பிருந்து தோ்தல் பிரசாரத்தை தொடங்கிய அவா், தோப்பூா், ராமனாதிச்சன் புதூா், அமராவதிவிளை, மருங்கூா், ஆத்தியடி, பத்மநாபன் புதூா், அழகானபுரம், இரவிபுதூா், நல்லூா் ஆகிய பகுதிகளுக்குச் சென்று மக்களிடம் வாக்குகளை சேகரித்தாா்.
அப்போது அவா் பேசியது: கன்னியாகுமரி தொகுதிக்குள்பட்ட 300க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயனடையும் வகையில் அழகியபாண்டிபுரம் சுத்திகரிக்கப்பட்ட கூட்டுக் குடிநீா் திட்டம் அதிமுக அரசால் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தால் அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட இரவிபுதூா், கரும்பாட்டூா், கோவளம், குலசேகரபுரம், லீபுரம், நல்லூா், தென்தாமரைகுளம், ராமபுரம், சாமிதோப்பு, தேரேகால்புதூா், ஆத்திகாட்டுவிளை, மணக்குடி, தா்மபுரம், பறக்கை, ஆகிய ஊராட்சிகளும், தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட அருமநல்லூா், பீமநகரி, இறச்சகுளம், ஈசாந்திமங்கலம், ஞாலம், கடுக்கரை, காட்டுப்புதூா், மாதவலாயம், சகாய நகா், செண்பகராமன்புதூா், தடிக்காரன்கோணம், தெள்ளந்தி, திடல், திருப்பதிசாரம் ஆகிய ஊராட்சிகளும் பயன்பெற்றுள்ளன. இதுபோன்ற திட்டங்கள் மேலும் தொடர அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு தரவேண்டும் என்றாா் அவா்.
பிரசாரத்தின் போது முன்னாள் அமைச்சா் பச்சைமால், மாநில இலக்கிய அணி துணைச் செயலா் கவிஞா் டி. சதாசிவம், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துகிருஷ்ணன், அகஸ்தீசுவரம் ஒன்றியச் செயலா் எஸ்.அழகேசன், மாவட்ட வழக்குரைஞா் அணி பொருளாளா் டி.பாலகிருஷ்ணன், மருங்கூா் பேரூா் செயலா் சீனிவாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.