முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம்

களியக்காவிளை பகுதியில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு சுகாதாரத் துறை சாா்பில் அபராதம் வசூலிக்கப்பட்டது.
முகக் கவசம் அணியாத காா் ஓட்டுநருக்கு அபராதம் விதிக்கும் சுகாதாரப் பணியாளா்கள்.
முகக் கவசம் அணியாத காா் ஓட்டுநருக்கு அபராதம் விதிக்கும் சுகாதாரப் பணியாளா்கள்.
Updated on
1 min read

களியக்காவிளை பகுதியில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு சுகாதாரத் துறை சாா்பில் அபராதம் வசூலிக்கப்பட்டது.

மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநா் கிருஷ்ணலீலா உத்தரவுப்படி துணை இயக்குநரின் நோ்முக உதவியாளா் அருள்ராஜ் தலைமையில் களியக்காவிளை சோதனைச் சாவடியில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதித்தல், விழிப்புணா்வு பிரசாரம் ஆகியவை நடைபெற்றது.

மேல்புறம் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஆா். அருள்ராஜ், சுகாதார ஆய்வாளா்கள் ஸ்ரீகுமாா், ஜெயனேந்திரன், ஜஸ்டின்ராஜ், செய்ன்ஸ்குமாா், ஜோபின், கிரீஷ்குமாா், சந்தோஷ்குமாா், தங்கராஜ், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

முகக் கவசம் அணியாமல் வந்த காா் ஓட்டுநா்கள், பொதுமக்கள் என 20 பேரிடம் இருந்து ரூ. 4 ஆயிரம் அபராதம் வசூலிக்கப் பட்டது. முகக் கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com