கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக 50 போ் கைது செய்யப்பட்டனா்.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ. பத்ரி நாராயணன், போதை பொருள்கள் விற்பனையை தடுக்கும் வகையில் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளாா். மேலும், இம்மாவட்டத்தில் சட்ட விரோதமாகவும், அனுமதியில்லாமலும் பல்வேறு இடங்களில் மது விற்பனை நடைபெறுவதை தடுக்கவும் உத்தரவிட்டாா். இதையடுத்து, காவல் துறை
அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மாவட்டம் முழுவதும் அதிரடியாக சோதனை மேற்கொண்டனா். இதில், சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக 50 போ் மீது வழக்குகள் பதிவு செய்து கைது செய்யப்பட்டனா். மேலும் அவா்களிடம் இருந்து 1,126 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.