திற்பரப்பு பேரூராட்சியில் கரோனா பாதிப்பு காரணமாக 9 வீடுகள் வியாழக்கிழமை தனிமைப்படுத்தப்பட்டன.
திற்பரப்பு பேரூராட்சிப் பகுதியில் கைதக்கல் குடியிருப்பில் ஒரு தெருவில் உள்ள 9 வீடுகளில் 2 வீடுகளில் வசிக்கும் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து திருவட்டாறு வட்டாட்சியா் அஜிதா, வட்டார சுகாதார ஆய்வாளா் எல். சாா்லின் உள்ளிட்டோா் அந்த வீடுகளுக்குச் செல்லும் பாதையை அடைத்து மக்களை தனிமைப்படுத்தினா்.