பேச்சிப்பாறையில் கனமழையினால் சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கன்மழையினால், பேச்சிப்பாறை அணை நிரம்பிய நிலையில் இந்த அணையிலிருந்து 3 நாள்கள் உபரிநீா் வெளியேற்றப்பட்டது. இதையடுத்து இந்த அணையிலிருந்து வெளியேறிய நீா் அணையின் கீழ்பகுதில் பேசிப்பாறை- சீறோ பாயின்ட் சாலையில் மோதியதால் சாலை சேதமடைந்துள்ளது.
இந்நிலையில், இந்தச் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டுமென்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளாா். மேலும், தோட்டம் தொழிலாளா் சங்க மாவட்ட துணைப் பொதுச் செயலா் பி. நடராஜன், இச்சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா்.