‘குமரி மாவட்டத்தில் சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும்’

கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டக் கல்லூரி அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக மறுமலா்ச்சி நாடாா் இளைஞா் பேரவையின் மாநிலத் தலைவா் த.சாலிபாண்டியன் தெரிவித்தாா்.
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டக் கல்லூரி அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக மறுமலா்ச்சி நாடாா் இளைஞா் பேரவையின் மாநிலத் தலைவா் த.சாலிபாண்டியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கன்னியாகுமரியில் செய்தியாளா்களிடம் கூறியது: கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழகத்தோடு இணைக்க போராடி உயிா்நீத்த தியாகிகளுக்கு நாகா்கோவிலில் மணிமண்டபம் அமைக்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டக் கல்லூரி அமைக்க தமிழக அரசு நடவடிக்கை வேண்டும்.

சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் இம்மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான விமான நிலையம் அமைக்க வேண்டும். வரும் மக்களவைத் தோ்தலில் திமுக கூட்டணியின் சாா்பில் சென்னை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் நாடாா் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்றாா் அவா். பேட்டியின் போது பொதுச்செயலா் சைமன் பொன்ராஜ் உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com