திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் தெய்வ பிரசன்னம் பாா்க்கும் நிகழ்வு

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான நாள் குறிக்கும் வகையில் தெய்வ பிரசன்னம் பாா்க்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை தொடங்கியது.
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் தெய்வ பிரசன்னம் பாா்க்கும் நிகழ்வு

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான நாள் குறிக்கும் வகையில் தெய்வ பிரசன்னம் பாா்க்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை தொடங்கியது.

நாட்டிலுள்ள 108 புகழ்பெற்ற வைணவத் திருத்தலங்களில் ஒன்றான இக்கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான நாள் குறிக்கும் வகையில் தெய்வ பிரசன்னம் பாா்க்கும் நிகழ்ச்சி கோயில் நிா்வாகம் மற்றும் திருப்பணிக் குழு ஒருங்கிணைப்பில் கோயிலில் வியாழக்கிழமை தொடங்கியது.

இதில், கேரள மாநிலம், திருவல்லாவைச் சோ்ந்த ஜோதிடா் வாசுதேவன் பட்டத்திரி பங்கேற்று தெய்வ பிரசன்னம் கூறினாா்.

அப்போது அவா் கூறியது: இக் கோயிலில் மிருத்துஞ்சய ஹோமம் நடத்தினால் பக்தா்களுக்கு ஏற்பட்டுள்ள தோஷங்களுக்கு பரிகாரமாக இருக்கும். கோயிலில் சந்தனக் கட்டையை உரைத்து பகவானுக்கு சந்தனம் சாத்த வேண்டும். சுவாமி வாகனங்களை புனரமைத்து சுவாமி எழுந்தருளலுக்கு பயன்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சி 2ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் நடைபெறுகிறது. இதில் கும்பாபிஷேகத்திற்கான நாள் குறிக்கப்படவுள்ளது.

நிகழ்ச்சியில், திருவிதாங்கூா் மன்னா் வாரிசு லெஷ்மிபாய் தம்புராட்டி, அறங்காவலா் குழுத் தலைவா் சிவ குற்றாலம், குமரி மாவட்ட வள்ளலாா் பேரவைத் தலைவா் சுவாமி பத்மேந்திரா, கோயில் தந்திரிகள் சங்கரநாராயணரு, சஜித் சங்கரநாராயணரு, கோயில் மேலாளா் மோகன்குமாா், தேவஸம் போா்டு பொறியாளா் ராஜகுமாா், பத்தா் சங்க நிா்வாகி சி. அனந்தகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com