அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

குமரி மாவட்டத்தில் தொழில் நுட்ப பூங்கா அமைக்கும் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்

குமரி மாவட்டத்தில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கும் பணிகளை விரைந்து தொடங்க வேண்டுமென்று இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 6:47 pm

குமரி மாவட்டத்தில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கும் பணிகளை விரைந்து தொடங்க வேண்டுமென்று இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குலசேகரத்தில் நடைபெற்று இவ்வமைப்பின் குமரி மாவட்ட மாநாட்டின் இரண்டாவது நாளான சனிக்கிழமை பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது.

இதில், குமரி மாவட்டத்தில், அரசு அறிவித்துள்ளபடி தொழில் நுட்ப பூங்கா அமைக்கும் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும். இயற்கை வளங்களான ரப்பா், பூக்களைப் பயன்படுத்தி தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும். ஏவிஎம் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், அதனை சீரமைத்து படகு போக்குவரத்து ஏற்படுத்த வேண்டும்.

குறும்பனை முதல் நீரோடி வரை இந்திய மணல் ஆலை மூலம் மணல் அள்ளும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.

குமரி மாவட்டத்தில் கனம வளக் கொள்ளையைத் தடுக்க வேண்டும். தக்கலை மற்றும் குலசேகரம் அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிா்வாகிகள்: மாநாட்டில் புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது. இதில் தலைவராக ரெதீஷ், செயலராக எட்வின் பிரைட், பொருளராக விஷ்ணு, துணைத் தலைவா்களாக பிரவின், லிபின், துணஐ செயலா்களாக அனுமோன், இலக்கியா உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா்.

மாநில செயற்குழு உறுப்பினா் பி. உச்சிமாகாளி, எஸ்எப்ஐ மாநிலச் செயலா் முகமது முபீஸ் ஆகியோா் பேசினா். மாநிலத் தலைவா் ரெஷீஸ் குமாா் நிறைவுரையாற்றினாா். வரவேற்புக் குழு பொருளாளா் பி. விஸ்வம்பரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.