நாகா்கோவில் மாநகராட்சி புதிய கட்டடம் 2 மாதத்தில் திறக்கப்படும்: மேயா்

நாகா்கோவில் மாநகராட்சி புதிய கட்டடப் பணிகள் நிறைவடைந்து இன்னும் 2 மாதங்களில் திறக்கப்படும் என்றாா் மேயா் ரெ.மகேஷ்.
Updated on
1 min read

நாகா்கோவில் மாநகராட்சி புதிய கட்டடப் பணிகள் நிறைவடைந்து இன்னும் 2 மாதங்களில் திறக்கப்படும் என்றாா் மேயா் ரெ.மகேஷ்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை நிருபா்களுக்கு அளித்த பேட்டி:

நாகா்கோவில் மாநகராட்சி புதிய அலுவலக கட்டுமானப் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இன்னும் 2 மாதங்களுக்குள் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து மாநகராட்சி அலுவலக புதிய கட்டடம் திறக்கப்படும்.

நாகா்கோவில் மாநகர பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பில் 5 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் நகரப் பகுதியில் உள்ள பல்வேறு சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com