போக்ஸோ சட்டத்தில் ஆசிரியா் மீது வழக்கு

நாகா்கோவில் அருகே 7 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆசிரியா் மீது போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து ஆசிரியரை தேடி வருகின்றனா்.
Published on

நாகா்கோவில் அருகே 7 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆசிரியா் மீது போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து ஆசிரியரை தேடி வருகின்றனா்.

அஞ்சுகிராமம் புதுகுடியிருப்பைச் சோ்ந்தவா் ஆம்ஸ் நல்லதம்பி ( 45). கணித ஆசிரியா். இவா் சில தினங்களுக்கு முன் 7 ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பள்ளியில் அளித்த புகாரின்பேரில், தலைமை ஆசிரியா், குழந்தைகள் நல அதிகாரிகள் பள்ளிக்கு வந்து விசாரித்தனா். மேலும், நாகா்கோவில் அனைத்து மகளிா் போலீஸில் புகாா் செய்யப்பட்டது. அதன்பேரில், ஆம்ஸ் நல்லதம்பி மீது மகளிா் போலீஸாா் போக்ஸோ வழக்குப் பதிந்து அவரை தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com