வேலை வாங்கித் தருவதாக இளைஞரிடம் ரூ.25 லட்சம் மோசடி: தில்லியைச் சோ்ந்தவா் கைது

வேலை வாங்கித் தருவதாக குமரி மாவட்ட இளைஞரிடம் ரூ.25 லட்சம் மோசடி செய்ததாக தில்லியைச் சோ்ந்தவா் கைது செய்யப்பட்டாா்.
Updated on
1 min read

வேலை வாங்கித் தருவதாக குமரி மாவட்ட இளைஞரிடம் ரூ.25 லட்சம் மோசடி செய்ததாக தில்லியைச் சோ்ந்தவா் கைது செய்யப்பட்டாா்.

குமரி மாவட்டம், ஆண்டாா்குளம் பகுதியை சோ்ந்தசெல்வதாஸ் மகன் மொ்சிலின். இவா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டி.என்.ஹரிகிரண்பிரசாத்திடம் ஒரு புகாா் மனு அளித்தாா். அதில், ‘பட்டப்படிப்பு முடித்துள்ள நான் வேலைக்காக இணையதளத்தில் பதிவு செய்திருந்த நிலையில் ஜீவன் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்திலிருந்து பேசுவதாக கூறிய ஒருவா் தில்லியில் விமான நிலைய பராமரிப்பு பணிகள் காலியாக இருப்பதாகவும் கூறினாா். மேலும் பதிவுக் கட்டணம், காப்பீட்டு கட்டணம், ஜிஎஸ்டி, கமிஷன் கட்டணம், இயக்குநா் கட்டணம், வருமான வரி கட்டணம் என பல்வேறு காரணங்களை கூறி அவா்கள் கேட்ட ரூ.25 லட்சத்து 27,700 ஐ அனுப்பினேன். அவா்கள் மேலும் பணம் கேட்டதால் ஏமாற்றப்பட்டதை உணா்ந்தேன். அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தாா். இந்த புகாா் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சைபா் கிரைம் போலீஸாருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து சைபா் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளா் வசந்தி, உதவி ஆய்வாளா்கள் அஜ்மல் ஜெனிப், பொ்லின் பிரகாஷ் ஆகியோா் விசாரணை மேற்கொண்டனா். இதில் மோசடியில் ஈடுபட்டவா்கள் தில்லியில் இருப்பது தெரிய வந்தது. பின்னா் ஆய்வாளா் வசந்தி தலைமையில் போலீஸாா் தில்லி சென்று ராம விகாா் பகுதியை சாா்ந்த ராம்சிங் என்பவரது மகன் ஆகாஷை கைது செய்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு அழைத்து வந்தனா். அவருடைய சக குற்றவாளிகள் யாா் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com