பாலப்பள்ளம் பேரூராட்சியில் ரூ.12 லட்சத்தில் சாலைப் பணி தொடக்கம்

பாலப்பள்ளம் பேரூராட்சிக்குள்பட்ட சேந்திவிளை -மேத்திரக்குளம் சாலையில் ரூ.12 லட்சம் செலவில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.
Updated on
1 min read

பாலப்பள்ளம் பேரூராட்சிக்குள்பட்ட சேந்திவிளை -மேத்திரக்குளம் சாலையில் ரூ.12 லட்சம் செலவில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

பாலப்பள்ளம் பேரூராட்சிக்குள்பட்ட சேந்திவிளை -மேத்திரக்குளம் சாலை மிகவும் பழுதடைந்து போக்குவத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்பட்டது.

இதையடுத்து பேரூராட்சியின் 2022 -2023 ஆண்டுக்கான நமக்குநாமே திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் செலவில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

கிள்ளியூா் எம்.எல்.ஏ. எஸ்.ராஜேஷ்குமாா் தலைமை வகித்து சாலைப் பணியைத் தொடங்கி வைத்தாா்.

பாலப்பள்ளம் பேரூராட்சித் தலைவா் டென்னிஸ், செயல் அலுவலா் பிராதாபன், துணைத் தலைவா் ஸ்டீபன், வாா்டு உறுப்பினா்கள் ஜெபா்சன், மேரிபீரிதா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com