மீண்டும் மஞ்சள் பை திட்டம்

மாா்த்தாண்டம் அருகே நல்லூா் பேரூராட்சி மதிலகம் பகுதியில் மீண்டும் மஞ்சள் பை திட்டத்தை தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
Updated on
1 min read

மாா்த்தாண்டம் அருகே நல்லூா் பேரூராட்சி மதிலகம் பகுதியில் மீண்டும் மஞ்சள் பை திட்டத்தை தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

இந்நிகழ்வின்போது அமைச்சா் பேசியதாவது:

அண்மைக் காலங்களில் நெகிழி பைகளால் ஓடைகள் அடைபட்டு பல்வேறு பிரச்னைகளை ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது. மேலும் அதிகளவு நெகிழி பைகள் கடலில் கலப்பதால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. உணவுப் பொருள்களை நெகிழி பைகளில் கொடுப்பது, புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட காரணமாகிவிடுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தை நெகிழி பயன்பாடு இல்லா மாவட்டமாகவும், பசுமை மாவட்டமாகவும் மாற்றுவதற்கு பொதுமக்கள் அனைவரும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் .

முன்னதாக கருங்கல் பேரூராட்சி கருங்கல் - முளகுமூடு சாலையில் ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கருங்கல் முதல் பூக்கடை வரை 5 கிமீ-க்கு ரூ. 3.85 கோடியில் மேம்பாடு செய்யும் பணியைத் தொடக்கி வைத்தாா். நல்லூா் பேரூராட்சி இலவுவிளை பகுதியில் உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின் கீழ் ரூ. 4 லட்சத்தில் கட்டப்பட்ட பாலத்தை திறந்து வைத்தாா்.

நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளா் தனேஷ் சேகா், நல்லூா் பேரூராட்சித் தலைவா் வளா்மதி கிறிஸ்டோபா், துணைத் தலைவா் அா்ஜூனன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com