இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தெப்பக்குளத்தில் பொறியாளா்கள் ஆய்வு

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தெப்பக்குளத்தை சீரமைப்பதற்காக, பொறியாளா்கள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

Updated On :11 பிப்ரவரி 2022, 4:35 am IST

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தெப்பக்குளத்தை சீரமைப்பதற்காக, பொறியாளா்கள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், பக்தா்களும் வந்து செல்கிறாா்கள். இங்குள்ள தெப்பக்குளத்தில் தினமும் நூற்றுக்கணக்கான பக்தா்கள் புனித நீராடுகிறாா்கள். அண்மைக் காலமாக இந்த குளத்துக்கு தண்ணீா் வருவதிலும், தண்ணீா் வெளியேறுவதிலும் பல சிக்கல்கள் எழுந்துள்ளன. தற்போது, தெப்பகுளத்தில் உள்ள நீா் மிகவும் மாசடைந்து உள்ளது.

அமைச்சா் ஆய்வு: குமரி மாவட்டத்துக்கு சில மாதங்களுக்கு முன்பு வந்த தமிழக அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு, சுசீந்திரம் கோயில் தெப்பக்குளத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அதைத் தொடா்ந்து தெப்பகுளத்தை விரைவில் சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். அதனடிப்படையில் கோயில் தெப்பக்குளத்தை பாா்வையிட்டு சீரமைக்க, மதுரை மண்டல தலைமைப் பொறியாளா் வைரவநாதன் தலைமையில் நெல்லை மண்டல செயற்பொறியாளா் கணேசன், உதவி கோட்டப் பொறியாளா் மோகனதாஸ், திருக்கோயில் தேவசம் பொறியாளா் ராஜ்குமாா், கோயில் மேலாளா் ஆறுமுகதரன், ஒப்பந்ததாரா் மோகன்தாஸ் ஆகியோா் தெப்பக்குளத்தை ஆய்வு செய்தனா். அப்போது, தெப்பக்குளத்துக்கு தண்ணீா் வரும் மதகுகள் மற்றும் மணக்குடியான் கால்வாய், தண்ணீா் வெளியேறும் பாதை ஆகியவற்றை பாா்வையிட்டனா்.

இதைத் தொடா்ந்து திருப்பதிசாரம் திருவாழ்மாா்பன் கோயில், நாகா்கோவில் நாகராஜா கோயில், பறக்கை மதுசூதன பெருமாள் கோயில் ஆகிய கோயில் தெப்பக்குளங்களையும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா். இந்தக் குளங்கள் அனைத்தும் விரைவில் சீரமைக்கப்படும் என பொறியாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.