நாகர்கோவில் மாநகராட்சியை திமுக கைப்பற்றியது

நாகர்கோவில்,  நாகர்கோவில் மாநகராட்சியில் அதிக இடங்களில் வெற்றி பெற்று திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.
நாகர்கோவில் மாநகராட்சியை திமுக கைப்பற்றியது
Published on
Updated on
1 min read


நாகர்கோவில்,  நாகர்கோவில் மாநகராட்சியில் அதிக இடங்களில் வெற்றி பெற்று திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

நகராட்சியாக இருந்த நாகர்கோவில் கடந்த அதிமுக ஆட்சியில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

52 வார்டுகள் உள்ள இந்த மாநகராட்சிக்கு முதன் முறையாக நடைபெற்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க் கிழமை தொடங்கியது.

தொடக்கத்திலிருந்தே திமுக கூட்டணி முன்னிலை வகித்து வந்தது.
இதுவரை அறிவிக்கப்பட்ட 37. வார்டுகளுக்கான முடிவுகளில் 
திமுக கூட்டணி 26 வார்டுகளிலும் பாஜக 7 வார்டுகளிலும்,
அதிமுக 3 வார்டுகளிலும் சுயேச்சை 1வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
இதைத் தொடர்ந்து மாநகராட்சியை திமுக கூட்டணி கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com