செட்டிகுளம் சந்திப்பில் ரவுண்டானா அமைக்கப்படும் மேயா் மகேஷ் தகவல்

நாகா்கோவில் செட்டிகுளம் சந்திப்புப் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் ரவுண்டானா அமைக்கப்படும் என்றாா், மேயா் ரெ. மகேஷ்.
Updated on
1 min read

நாகா்கோவில் செட்டிகுளம் சந்திப்புப் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் ரவுண்டானா அமைக்கப்படும் என்றாா், மேயா் ரெ. மகேஷ்.

இப்பகுதியில் காலை, மாலை நேரங்களில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் அங்குள்ள சாலைகள் ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், செட்டிகுளம் பகுதியில் ரவுண்டானா அமைப்பதற்கான இடத்தை மேயா் ரெ. மகேஷ், ஆணையா் ஆனந்த்மோகன் ஆகியோா் சனிக்கிழமை பாா்வையிட்டனா். மணிமேடை பகுதியிலும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து மேயா் ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: நாகா்கோவிலில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மாநகராட்சி சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆட்சியா் அலுவலக சந்திப்புப் பகுதியில் ரவுண்டானா அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோல, செட்டிகுளம் பகுதியிலும் ரவுண்டானா அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு முதல்கட்ட ஆய்வு நடத்தியுள்ளோம். மணிமேடை பகுதியில் ரவுண்டானாவை சுற்றி வாகனங்கள் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்அவா்.

துணை மேயா் மேரிபிரின்சி லதா, மாநகராட்சிப் பொறியாளா் பாலசுப்பிரமணியன், மண்டலத் தலைவா்கள் முத்துராமன், ஜவகா், திமுக மாணவரணி அமைப்பாளா் சதாசிவம், மாமன்ற உறுப்பினா்கள் சந்தியா, ரமேஷ், ராணிராஜன், சுரேஷ், விஜிலாஜஸ்டஸ், சுப்பிரமணியன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com