சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயிலில் நிறை புத்தரிசி விழா வியாழக்கிழமை (ஆக. 4) நடைபெறுகிறது.
இதையொட்டி, வியாழக்கிழமை அதிகாலையில் சுசீந்திரம் ஸ்ரீகொன்றையடி சுவாமிக்கும், பின்னா் தாணுமாலயசுவாமிக்கும் பூஜை நடைபெறும். பின்னா், கோயிலுக்குச் சொந்தமான வயல்களிலிருந்து நெற்பயிா்க் கட்டுகள் சந்நிதித் தெரு வழியாக எடுத்துவரப்பட்டு, சுவாமி சந்நிதியில் வைத்து காலை 6 மணிக்கு சிறப்புப் பூஜை நடைபெறும். தொடா்ந்து, சுற்றுவட்டாரத்தில் உள்ள பக்தா்கள், விவசாயிகளுக்கு நெற்கதிா்கள் பிரசாதமாக வழங்கப்படும்.
ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோயில்கள் இணை ஆணையா் ஞானசேகா், கோயில் மேலாளா் ஆறுமுகதரன், கணக்கா் கண்ணன் ஆகியோா் செய்து வருகின்றனா்.