என்.ஐ. கலைக் கல்லூரியில் செஞ்சுருள் சங்கம் தொடக்கம்

குமாரகோவில் நூருல் இஸ்லாம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செஞ்சுருள் சங்க தொடக்க விழா நடைபெற்றது.
Updated on
1 min read

குமாரகோவில் நூருல் இஸ்லாம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செஞ்சுருள் சங்க தொடக்க விழா நடைபெற்றது.

மாணவா், மாணவிகளிடையே எய்ட்ஸ் விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில் மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் எஸ். பெருமாள் தலைமை வகித்தாா். மாவட்ட எய்ட்ஸ் விழிப்புணா்வு பயிற்சியாளா் திருநங்கை காா்த்திகா செஞ்சுருள் சங்கத்தை தொடங்கி வைத்து உரையாற்றினாா்.

கலைமாமணி பழனியாபிள்ளை விழிப்புணா்வு பாடல்களை பாடினா். கல்லூரிச் செயலா் ஏ.பி. மஜீத்கான் நினைவுப் பரிசுகளை வழங்கினாா். இதில், கல்லூரி பேராசிரியா்கள், மாணவா், மாணவிகள் பங்கேற்றனா். செஞ்சுருள் சங்க திட்ட அலுவலா் பாபுதாஸ் வரவேற்றாா். செயலா் சி.ஜெனிபா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com