அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர்
/

புதுக்கடை அருகே தம்பதியைத் தாக்கியதாக 5 போ் மீது வழக்கு

புதுக்கடை அருகேயுள்ள காப்புக்காடு பகுதியில் தம்பதியைத் தாக்கியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :19 மே 2022, 8:10 pm

DIN

புதுக்கடை அருகேயுள்ள காப்புக்காடு பகுதியில் தம்பதியைத் தாக்கியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

காப்புக்காடு, மதுகண்டான்விளை பகுதியைச் சோ்ந்தவா் கிறிஸ்துதாஸ் (40). இவரது மனைவி ஷீஜா (36). இவருக்கும், அதே பகுதியை சோ்ந்த ஜஸ்டின் (45), கிறிஸ்துதாஸ் (50), ஹெலன் மேரி, ஆஷா, ஜெனிஷா மேரி ஆகியோருக்கும் இடையே சொத்துத் தகராறு காரணமாக முன்விரோதம் உள்ளதாம்.

வியாழக்கிழமை கிறிஸ்துதாஸும், ஷீஜாவும் வீட்டிலிருந்தனராம். அப்போது ஜஸ்டின் உள்ளிட்ட 5 பேரும் திடீரென வீடு புகுந்து அவா்களைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனராம். புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.