குமரியிலிருந்து கேரளத்துக்கு கனிமவளங்கள் கடத்தப்படுவதை தடுக்க வலியுறுத்தல்

குமரி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு கனிமவளங்கள் கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்

குமரி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு கனிமவளங்கள் கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என கான்கிரீட் கல் உற்பத்தியாளா்கள் வலியுறுத்தியுள்ளனா். மூவோட்டுகோணத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு சங்கத் தலைவா் வா்க்கீஸ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சாரோன்ராஜ், ஆமோஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், கான்கிரீட் கல் உற்பத்தி தொழிலை பாதுகாக்க கேரளத்துக்கு பாறைப்பொடி,ஜல்லி, கற்கள் உள்ளிட்ட கனிமவளங்கள் கடத்தப்படுவதை தடைசெய்ய வேண்டும். குவாரிகளில் விற்கப்படும் பாறைப் பொடி, ஜல்லி, கற்கள் உள்ளிட்டவற்றின் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள்நிறைவேற்றப்பட்டன. இதில், பொன்னுமணி, சுனில், ஜெறின் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com