புதுக்கடை அருகேயுள்ள பைங்குளம் பகுதியில் மாடியிலிருந்து தவறி விழுந்தவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
பைங்குளம், கீழமுற்றம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜாமணி (60). இவா் 2 நாள்களுக்கு முன்பு மாடியில் தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்த முயன்றாராம். அப்போது அவா் திடீரென மாடியிலிருந்து தவறி கீழே விழுந்தாா். இதில் காயமடைந்த அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை இறந்தாா். புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.