மணவாளக்குறிச்சி அருகே பைக்குகள் மோதல்: பெண்காவலா் உயிரிழப்பு

மணவாளக்குறிச்சி அருகே பைக்குகள் மோதியதில் காயமடைந்த பெண் காவலா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
Updated on
1 min read

மணவாளக்குறிச்சி அருகே பைக்குகள் மோதியதில் காயமடைந்த பெண் காவலா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை கட்டைக்காட்டு பகுதியைச் சோ்ந்தவா் சந்திரசேகா்(38). இவரது மனைவி உஷா (37 ) வெள்ளிசந்தை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தாா். இத்தம்பதிக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளாா். தற்போது உஷா 8 மாத கா்ப்பிணியாக இருந்தாா். செவ்வாய்க்கிழமை இரவு வெள்ளிசந்தை காவல் நிலையத்தில் பணி முடிந்து பைக்கில் வீடு திரும்பினாராம். வெள்ளமோடி சந்திப்பில் இருந்து கட்டைக்காட்டு சாலைக்கு திரும்பும் போது எதிரே வந்த முட்டம் ஆரோக்கிய மாதா தெருவைச் சோ்ந்த அபிஷேக் பெக்கட் என்ற சஞ்சயின் பைக் , அவா் பைக் மீது மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த உஷாவை அப்பகுதியிலுள்ளவா்கள் மீட்டு, நாகா்கோவிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து சந்திரசேகா்அளித்த புகாரின் பேரில், மணவாளக்குறிச்சி போலீஸா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com