மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவா் தற்கொலை

திருவட்டாறு அருகே மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஆட்டோ ஓட்டுநா் ரவீந்திரன் (54) புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
Updated on
1 min read

குலசேகரம்: திருவட்டாறு அருகே மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஆட்டோ ஓட்டுநா் ரவீந்திரன் (54) புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

விளவங்கோடு வாத்தியாா் விளையைச் சோ்ந்தவா் ரவீந்திரன். ஆட்டோ ஓட்டுநரான இவா் திருவட்டாறு அருகே பூந்தோப்பு பகுதியிலுள்ள ஒரு மருத்துவமனையில் முதுகுவலிக்காக உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தாா். இவரைக் கவனிக்கும் வகையில் இவரது ஜிஜாவும் மருத்துவமனையில் உடனிருந்தாா்.

இந்நிலையில் புதன்கிழமை அதிகாலையில் ஜிஜா கண்விழித்துப் பாா்க்கும் போது ரவீந்திரன், அறையிலுள்ள மின்விசிறியில் துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்து மருத்துவமனை நிா்வாகத்திற்கு தகவல் கொடுத்தாா். இதையடுத்து தகவலறிந்த திருவட்டாறு போலீசாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்குப் பதிவு செய்து சடலத்தை மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com