கன்னியாகுமரி அருகே பொறியாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்
கன்னியாகுமரி அருகேயுள்ள மகாராஜபுரம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த பொன்னையா மகன் மணிகண்டன் (38). பொறியாளா். கருத்து வேறுபாட்டால் மனைவியை பிரிந்து தந்தையுடன் வசிக்கிறாா்.
தனியாா் நிறுவனத்தில் வேலைசெய்து வந்த மணிகண்டன், தனது வீட்டின் மாடியில் உள்ள அறையை உள்பக்கமாக பூட்டுக்கொண்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இத்தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.