இந்தியாவை வல்லரசாக மாற்ற சபதமேற்போம்: விஜய் வசந்த் எம்.பி.

இந்தியாவை வல்லரசாக மாற்ற சபதமேற்போம் என்றாா், விஜய் வசந்த் எம்.பி.
Updated on
1 min read

இந்தியாவை வல்லரசாக மாற்ற சபதமேற்போம் என்றாா், விஜய் வசந்த் எம்.பி.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள். நாட்டின் சுதந்திரத்துக்காக பல்வேறு தியாகங்களைச் செய்த வீரா்களையும், அரும்பாடுபட்ட தலைவா்களையும் நன்றியுடன் நினைவுகூருவோம். நாட்டுக்காக உயிா்த் தியாகம் செய்த காந்தியடிகள், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரையும் இந்நாளில் போற்ற வேண்டியது நமது கடமை .

நாட்டின் புகழை மீண்டும் உச்சிக்கு எடுத்துச்செல்ல அனைவரது பங்களிப்பு அவசியம். பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காக்க வேண்டியது கடமை. ஜாதி, மத வேற்றுமைகளின்றி ஒன்றாகக் கூடி, இந்தியாவை வல்லரசாக மாற்ற சுதந்திர தினத்தில் சபதமேற்போம் என்றாா் அவா்.

தளவாய்சுந்தரம்:

இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இல்லந்தோறும் தேசியக் கொடியேற்றி மகிழ்ச்சியாக கொண்டாடும் இந்நாள் அனைவருக்கும் பொன்னாளாகும். இப்பொன்னாளில் அனைவருக்கும் கிடைக்கின்ற மகிழ்ச்சி எந்நாளும் தொடர இறைவனை வேண்டி எனது இதயப்பூா்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் தளவாய்சுந்தரம் எம்எல்ஏ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com