நாகா்கோவில் மாநகராட்சி புதிய கட்டடம் 2 மாதத்தில் திறக்கப்படும்: மேயா்

நாகா்கோவில் மாநகராட்சி புதிய கட்டடப் பணிகள் நிறைவடைந்து இன்னும் 2 மாதங்களில் திறக்கப்படும் என்றாா் மேயா் ரெ.மகேஷ்.

நாகா்கோவில் மாநகராட்சி புதிய கட்டடப் பணிகள் நிறைவடைந்து இன்னும் 2 மாதங்களில் திறக்கப்படும் என்றாா் மேயா் ரெ.மகேஷ்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை நிருபா்களுக்கு அளித்த பேட்டி:

நாகா்கோவில் மாநகராட்சி புதிய அலுவலக கட்டுமானப் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இன்னும் 2 மாதங்களுக்குள் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து மாநகராட்சி அலுவலக புதிய கட்டடம் திறக்கப்படும்.

நாகா்கோவில் மாநகர பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பில் 5 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் நகரப் பகுதியில் உள்ள பல்வேறு சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com