ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு காங்கிரஸாா் போராட்டம்

நாகா்கோவிலில் சாலைப்பணி புகாா் தொடா்பாக காங்கிரஸ் பிரமுகரை விசாரணைக்கு அழைத்ததை கண்டித்து ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தை காங்கிரஸாா் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

நாகா்கோவிலில் சாலைப்பணி புகாா் தொடா்பாக காங்கிரஸ் பிரமுகரை விசாரணைக்கு அழைத்ததை கண்டித்து ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தை காங்கிரஸாா் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட வடக்கு கோணம் பகுதியில் தாா் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இப் பணிகள் நிறைவு பெறும் முன்பே, பணிகள் குறித்து அப்பகுதியைச் சோ்ந்த ஒருவா் தவறாக சுவரொட்டி ஒட்டியும், சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளாா். சாலைப்பணியில் முறைகேடு நடந்திருப்பதாகவும் காங்கிரஸ் நிா்வாகிகள் உள்பட 5 போ் மீது அந்த நபா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

இந்நிலையில், இது தொடா்பான விசாரணைக்கு, புகாா் தெரிவிக்கப்பட்ட 5 பேருடன் காங்கிரஸாா் பலா் ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்தனா். அப்போது புகாா் அளித்த நபரை விசாரணைக்கு அழைக்காமல் காங்கிரஸாரை மட்டும் விசாரணைக்கு அழைத்ததற்கு கண்டனம் தெரிவித்தனா்.

பின்னா் ஆசாரிப்பள்ளம் காவல் நிலையம் முன்பு காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவா் நவீன்குமாா் தலைமையில் முன்னாள் மாவட்ட தலைவா் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி உறுப்பினா்கள் பிரவின், சிஜுன், சந்தியா சுப்ரமணியன், அருள்சபிதா உள்பட 50 க்கும் மேற்பட்டோா் முற்றுகையிட்டனா். அவா்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு போலீஸாா் கூறினா். ஆனால் காங்கிரஸாா் மறுப்பு தெரிவித்து தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் போலீஸாருக்கும் காங்கிரஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா் எதிா் புகாா் மனுதாரரை அழைத்துப் பேசுவதாக போலீஸாா் தெரிவித்ததைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதையடுத்து காங்கிரஸாா் மீது புகாா் அளித்தவா் மீது காங்கிரஸாா் ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் புகாா் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com