வாக்காளா் அட்டை- ஆதாா் எண் இணைப்பு: செப். 4இல் சிறப்பு முகாம்

வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கு வசதியாக குமரி மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை (செப்.4) சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கு வசதியாக குமரி மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை (செப்.4) சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலை முறைப்படுத்தும் வகையில், வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணி கடந்த 1 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இது தொடா்பாக பொதுமக்கள் வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கு வசதியாக தங்களது பகுதியில் அமைந்துள்ள வாக்குச் சாவடிகளில் செப். 4 ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. எனவே, கன்னியாகுமரி மாவட்ட வாக்காளா்கள் அனைவரும், தாமாக முன் வந்து தங்கள்பகுதியில் உள்ள வாக்குச் சாவடியை அணுகி வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com