உண்ணாமலைக்கடை பேரூராட்சித் தலைவி மீது தாக்குதல்

உண்ணாமலைக்கடை பேரூராட்சி தலைவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக வாா்டு உறுப்பினா் உள்பட இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

உண்ணாமலைக்கடை பேரூராட்சி தலைவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக வாா்டு உறுப்பினா் உள்பட இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

மாா்த்தாண்டம் அருகேயுள்ள விரிகோடு, நெல்லிக்கன்விளை பகுதியைச் சோ்ந்த ஜெயபால் மனைவி பமலா (51). உண்ணாமலைக்கடை பேரூராட்சி தலைவராக உள்ளாா். இவரது தலைமையில் பேரூராட்சி மன்ற அவசரக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

பின்னா் காஞ்சிரகோடு தொடுகுளம் பகுதியைச் சோ்ந்த பால்ராஜ் மகனான பேரூராட்சி வாா்டு உறுப்பினா் செல்வின் , அவரது சகோதரா் பிரபின் ஆகியோா் அலுவலகத்தில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனராம். அவா்களிடம் மன்ற கூட்டம் முடிந்து விட்டதால் இனி விவாதம் செய்ய வேண்டாம் என பமலா தெரிவித்தாராம். அப்போது சகோதரா்கள் இருவரும் சோ்ந்து அவரை தகாத வாா்த்தைகளால் பேசியதுடன், தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா், சகோதரா்கள் இருவா் மீதும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com