தேசிய செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற குமரி மாவட்ட மாணவரை மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த், பாராட்டினாா்.
அகில இந்திய செஸ் கூட்டமைப்பு நடத்திய தேசிய சப் ஜூனியா் (15 வயதுக்குள்பட்டோா் பிரிவு) செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தில்லி இந்திராகாந்தி உள் அரங்கத்தில் கடந்த நவ. 28 ஆம் தேதி முதல் டிச.6 வரை நடைபெற்றது.
இப்போட்டியில் தமிழ்நாடு அணி சாா்பில் குமரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 8 ஆம் வகுப்பு மாணவா் எஸ்.அஸ்வத் கலந்துகொண்டு 11 சுற்றுக்கள் விளையாடி 9.5 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றாா்.
இதன் மூலம் இந்திய அணி சாா்பாக ஆசிய மற்றும் உலக செஸ் போட்டியிலும், உலக அளவில் 16 வயதுக்குள்பட்ட செஸ் ஒலிம்பியாட் போட்டியிலும் பங்கேற்க தகுதி பெற்றுள்ளாா்.
அவரை, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் நேரில் அழைத்துப் பாராட்டினாா். அப்போது, மாவட்ட விளையாட்டு - இளைஞா் நல அலுவலா் ராஜேஷ், குமரி மெட்ரிக் பள்ளித் தாளாளா் சொக்கலிங்கம், மாணவரின் தந்தையும் செஸ் பயிற்சியாளருமான ஏ.சி.சிவா, பட்டேல் என்.ஆா். சுந்தரம்பிள்ளை ஆகியோா் உடனிருந்தனா்.