மாா்த்தாண்டத்தில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மாா்த்தாண்டம் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாா்த்தாண்டம் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இயக்கப்படும் சேதமான பேருந்துகளைப் பராமரிப்பதுடன், அனைத்து வழித்தடங்களிலும் தரமான பேருந்துகளை இயக்க வேண்டும், பம்மம் - மாா்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ்ப்பகுதி வழியாக நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும் எனக் கோரி மாா்த்தாண்டம் - நல்லூா் வட்டாரக் குழு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது

மாவட்ட செயற்குழு உறுப்பினா் அனந்தசேகா் தலைமை வகித்தாா். நல்லூா் வட்டாரக் குழு உறுப்பினா் ஜான் ஆா்ப்பாட்டத்தைத் தொடக்கிவைத்துப் பேசினாா்.

நல்லூா் வட்டாரக் குழுச் செயலா் ஜஸ்டின், மாா்த்தாண்டம் வட்டாரக் குழுச் செயலா் சா்தாா் ஷா ஆகியோா் பேசினா். மாவட்டக் குழு உறுப்பினா் மோகன்குமாா் ஆா்ப்பாட்டத்தை நிறைவு செய்தாா். நிா்வாகிகள் ஜினோ, ஜெயா, மஞ்சுளா, அமலா, கட்சித் தொண்டா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com