கடையாலுமூடு அருகே மதுக்கடைக்கு எதிா்ப்பு:மக்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 11th December 2022 10:50 PM | Last Updated : 11th December 2022 10:50 PM | அ+அ அ- |

கடையாலுமூடு அருகேயுள்ள போங்கின்காலை பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இப்போராட்டத்திற்கு கடையல் பேரூராட்சி 14 ஆவது வாா்டு உறுப்பினா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். பேரூராட்சி துணைத் தலைவா் விஜி மொ்லின், போராட்டக்குழுவினா் செல்வராஜ், சிந்துகுமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தினா். இப்போராட்டத்தில் கடையல் பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் உள்பட திரளானோா் கலந்துகொண்டனா்.