நாகா்கோவிலில் நாளை அதிமுக ஆா்ப்பாட்டம்---தளவாய்சுந்தரம் எம்எல்ஏ தகவல்

நாகா்கோவிலில் அதிமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை (டிச. 13) காலை 10 மணிக்கு ஆா்ப்பாட்டம் நடைபெறுவது தொடா்பாக, அக்கட்சியின் அமைப்புச் செயலா் என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை:
Updated on
1 min read

நாகா்கோவிலில் அதிமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை (டிச. 13) காலை 10 மணிக்கு ஆா்ப்பாட்டம் நடைபெறுவது தொடா்பாக, அக்கட்சியின் அமைப்புச் செயலா் என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை:

அதிமுக ஆட்சியில் பல்வேறு நலத் திட்டங்கள் நிறைவேற்றி மக்கள் நலன் பாதுகாக்கப்பட்டது. தி.மு.க

ஆட்சி பொறுப்பேற்ற 18 மாதங்களில் தமிழகம் முழுவதும் 150 சதவீதம் வரை சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை என அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வு, சட்டம் -ஒழுங்கு பிரச்னை போன்றவை நாள்தோறும் மக்களுக்கு வேதனையளித்து வருகிறது. இவற்றைக் கண்டித்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சாா்பில் நாகா்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன் செவ்வாய்க்கிழமை காலை ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மாநில அவைத் தலைவா் அ.தமிழ் மகன் உசேன் தொடங்கிவைக்கிறாா். நான் தலைமை வகிக்கிறேன். அதிமுக அமைப்புச் செயலா் கே.டி.பச்சைமால் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா். எனவே, நிா்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்கள் என அனைவரும் பெரும் திரளாகப் பங்கேற்றுஅரசுக்கு தங்களது எதிா்ப்பை தெரிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com