பாரதி பிறந்த மண்ணில்பெண்கள் மதிக்கப்பட வேண்டும்------தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன்
By DIN | Published On : 11th December 2022 10:56 PM | Last Updated : 11th December 2022 10:56 PM | அ+அ அ- |

பாரதியாா் பிறந்த மண்ணில் பெண்கள் மதிக்கப்பட வேண்டும் என்றாா் தெலங்கானா- புதுச்சேரி மாநில ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன்.
மாா்த்தாண்டம் அருகேயுள்ள கோட்டகம் ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்க வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஜி 20 மாநாட்டுக்கு இந்தியா தலைமை வகிக்கும் செய்தியை கிராமந்தோறும் எடுத்துரைக்க வேண்டுமே பிரதமா் கூறியுள்ளாா். இதற்கான மாநாடுகள் தமிழகத்தில் 4 இடங்கள், தெலுங்கானாவில் 6 இடங்கள், புதுச்சேரியில் ஓரிடம் என நாடு முழுவதும் 200 இடங்களில் நடைபெறவுள்ளன. இந்த மாநாடுகளில் இளைஞா்கள் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்த முடியும். எம்மதமும் சம்மதம் என்ற கொள்கையை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். பெண்களுக்காக மிகப்பெரிய கொள்கையை வகுத்துக் கொடுத்தவா் பாரதி. அவா் பிறந்த மண்ணில் பெண்கள் மதிக்கப்பட வேண்டும் என்றாா் அவா்.
இந் நிகழ்ச்சியில் நாகா்கோவில் எம்எல்ஏ எம்.ஆா். காந்தி, பாஜக மாவட்டத் தலைவா் சி. தா்மராஜ், வெள்ளிமலை சுவாமி சைதன்யானந்தஜி மஹராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.