ரூ. 3.15 கோடியில் குலசேகரம்-திருவரம்பு சாலை சீரமைப்புப் பணி---அமைச்சா் த. மனோ தங்கராஜ் தொடங்கிவைத்தாா்
By DIN | Published On : 11th December 2022 10:54 PM | Last Updated : 11th December 2022 10:54 PM | அ+அ அ- |

குலசேகரம்-திருவரம்பு சாலையை ரூ. 3.15 கோடியில் மேம்படுத்தும் பணியை, தமிழக தகவல் தொழில்நுட்பவியல்- டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் தனேஷ், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் ரீமோன் மனோ தங்கராஜ், திருவட்டாறு ஒன்றிய திமுக செயலா் ஜான்சன், துணைச் செயலா் ஜோஸ் எட்வா்ட், மாநில பொதுக்குழு உறுப்பினா் அலாவுதீன், மாவட்ட கலை இலக்கியப் பகுத்தறிவு அணி அமைப்பாளா் ஜெஸ்டின் பால்ராஜ், வா்த்தகா் அணி துணை அமைப்பாளா் ஜே.எம்.ஆா். ராஜா, மாவட்ட துணைச் செயலா் ராஜ் பேரூா் செயலா்கள் ஜெபித் ஜாஸ், ஜான் எபனேசா், சேம் பென்னட் சதீஸ், ஒன்றிய அவைத் தலைவா் சி.எஸ். செல்லப்பன், திருவட்டாறு பேரூராட்சித் தலைவா் பெனிலா ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடா்ந்து, ரூ. 54 லட்சத்தில் பொன்மனை-கிழக்கின்பாகம் சாலை விரிவாக்கப் பணியை அமைச்சா் மனோ தங்கராஜ் தொடங்கிவைத்தாா்.