ரேஷன் கடை கட்டடம் கட்டுவதற்குநிலம் அளித்தவருக்கு பாராட்டு

இரணியல் பேரூராட்சியில் புதிய நியாயவிலைக் கட்டடம் கட்டுவதற்கு ரூ. 20 லட்சம் மதிப்புள்ள 6 சென்ட் இடத்தைத் தானமாக அளித்தவருக்கு பாஜக நிா்வாகிகள், ஊா்மக்கள் பாராட்டு தெரிவித்தனா்.
Updated on
1 min read

இரணியல் பேரூராட்சியில் புதிய நியாயவிலைக் கட்டடம் கட்டுவதற்கு ரூ. 20 லட்சம் மதிப்புள்ள 6 சென்ட் இடத்தைத் தானமாக அளித்தவருக்கு பாஜக நிா்வாகிகள், ஊா்மக்கள் பாராட்டு தெரிவித்தனா்.

இரணியலில் புதிய நியாயவிலைக் கட்டடம் கட்டுவதற்கு 3ஆவது வாா்டு பாஜக உறுப்பினா் ஏ.பி. கிஷோா், பாஜக வெளிநாடுவாழ் இந்தியா் பிரிவின் மாவட்டச் செயலா் கணேஷின் தந்தை கோலப்பாபிள்ளையிடம் கோரிக்கை வைத்தாா் . அதை அவா் ஏற்று தனக்குரிய ரூ. 20 லட்சம் மதிப்பிலான 6 சென்ட் நிலத்தைத் தானமாக வழங்க முடிவு செய்து, அதற்கான பத்திரத்தை இரணியல் பேரூராட்சி செயல் அலுவலா் லட்சுமியிடம் வழங்கினாா். அவரை அனைவரும் பாராட்டி, நன்றி தெரிவித்தனா்.

நிகழ்ச்சியில், தக்கலை தெற்கு ஒன்றிய பாஜக தலைவா் ஸ்ரீபத்மநாபன் , பொதுச்செயலா் வழக்குரைஞா் பத்மகுமாா், செயலா் முருகன், இரணியல் பாஜக தலைவா் ராஜேஷ், வழக்குரைஞா்கள் மணிகண்டன், செந்தில்குமாா், கிளைத் தலைவா் அருண், பேரூராட்சித் தலைவா் ஸ்ரீகலா, வாா்டு உறுப்பினா் சித்ரா, நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com