தேங்காய்ப்பட்டினத்தில் சாலைப் பணி தொடக்கம்

தேங்காய்ப்பட்டினத்தில் தாா்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

தேங்காய்ப்பட்டினத்தில் தாா்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

தேங்காய்ப்பட்டினம் சந்திப்பு முதல் பனங்கால முக்கு வரையிலான சாலை மிகவும் சேதமடைந்திருந்தது. இச்சாலையைச் சீரமைக்க எம்எல்ஏவிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ. 22 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் சனிக்கிழமை தொடங்கின.

கிள்ளியூா் எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாா் தலைமை வகித்து, பணியைத் தொடக்கிவைத்தாா். அகில இந்திய மீனவா் காங்கிரஸ் செயலா் ஜோா்தான் முன்னிலை வகித்தாா். கிள்ளியூா் கிழக்கு வட்டாரத் தலைவா் ராஜசேகா், ராஜகிளன், கென்னடி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com