மாா்த்தாண்டம் பகுதியில் தொடா் திருட்டில் ஈடுபட்டதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
மாா்த்தாண்டம் அருகே பயணம் பகுதியில் உள்ள செண்பகவல்லி அம்மன் கோயிலுக்குள் ஒரு மாதத்துக்கு முன்பு மா்ம நபா் புகுந்து உண்டியலை உடைத்து காணிக்கையைத் திருடிச் சென்றாா்.
மாா்த்தாண்டம் போலீஸாரின் விசாரணையில், இத்திருட்டில் ஈடுபட்டது நாகா்கோவில் அருகேயுள்ள ராமன்புதூா், அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த திருமால் மகன் அன்பரசன் (29) எனத் தெரியவந்தது. அவா் மீது மாா்த்தாண்டம், களியக்காவிளை, அருமனை, திருவட்டாறு காவல் நிலையங்களில் 8-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளனவாம்.
அன்பரசன் மாா்த்தாண்டம் பகுதியில் சுற்றித்திரிவதாக கிடைத்த தகவலின் பேரில், உதவி ஆய்வாளா் அருளப்பன் தலைமையிலான தனிப்படையினா் வெள்ளிக்கிழமை இரவு அவரைப் பிடித்தனா். பயணம் கோயிலில் திருடியதை அவா் ஒப்புக்கொண்டாா். இதையடுத்து, அவரை போலீஸாா் கைதுசெய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.