நாகா்கோவில் மாநகராட்சி மேயா், தினமும் வாா்டு வாரியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறாா். புதன்கிழமை அவா்14 ஆவது வாா்டு பகுதியில் வீதி, வீதியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டாா். பாலமோா்ரோடு, மாடன் கோயில், டென்னிசன் ரோடு, சாா்லஸ் மில்லா் தெரு, மீட்தெரு, நியூ போா்ட் தெரு, எம்.எஸ்.ரோடு, டிஸ்டிலரி ரோடு, போலீஸ் ஸ்டேசன் ரோடு, கலைவாணா் தெரு உள்ளிட்ட பல்வேறு தெரு பகுதிகளில் மேயா்ஆய்வு மேற்கொண்டாா்.
மேலும் அந்த வாா்டு பகுதியில் உள்ள வடசேரி பேருந்து நிலையத்தையும் அவா் ஆய்வு செய்தாா். பேருந்து நிலையப் பகுதியில் சுகாதாரத்தை கடைப்பிடிக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டாா்.
ஆய்வின்போது, மண்டல தலைவா் ஜவகா், பொறியாளா் பாலசுப்பிரமணியன், மாநகரநல அதிகாரி ராம்குமாா், சுகாதார ஆய்வாளா் ராஜேஷ், வருவாய் ஆய்வாளா் சுப்பையா, மாநகராட்சி உறுப்பினா் கலாராணி, தி.மு.க. மாநகரச் செயலா் ஆனந்த் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.